அதிமுக -வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு!

top-news
FREE WEBSITE AD

அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை இன்னும் 10 நாட்களில் ஒன்று சேர்க்க முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் திண்டுக்கல்லில் சுற்றுப்பயணத்திற்காக தங்கியிருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, பல்வேறு கோஷ்டிகள் உருவாகின. குறிப்பாக, கட்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தனித்தனி அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்த பிளவுகளின் காரணமாக, கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும், உள்ளாட்சித் தேர்தல்களிலும் அதிமுகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டது.

கட்சி பிளவுபட்டு இருப்பதன் விளைவாக, அதிமுகவின் வாக்கு வங்கிகள் சிதறி, வெற்றி வாய்ப்புகள் குறைந்து வருவதாக மூத்த தலைவர்கள் பலர் கருதுகின்றனர். இந்தச் சூழலில்தான், எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன் பகிரங்கமாக இந்தப் பேச்சைப் பேசினார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக அலுவலகத்தில் பேசிய செங்கோட்டையன், சில முக்கிய விஷயங்களை அழுத்தமாகத் தெரிவித்தார்.தேர்தல் தோல்விகளால் "கட்சி பிளவுபட்டு இருப்பதால் நாம் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் (2019, 2024) தோல்வி அடைந்துள்ளோம். இந்த நிலை நீடித்தால், எதிர்காலத்தில் நாம் வெற்றி பெற முடியாது."

கட்சி வெற்றி பெற வேண்டுமானால், பிரிந்து சென்றவர்களை மீண்டும் அரவணைத்து கட்சியில் இணைக்க வேண்டும். இந்த முடிவை எடுப்பதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதிக்கிறேன்.""பத்து நாட்களுக்குள் இந்த முடிவை எடப்பாடி பழனிசாமி எடுக்கவில்லை என்றால், மறப்போம், மன்னிப்போம் என்ற கொள்கையின் அடிப்படையில், என்னைப் போன்றவர்களும் இணைந்து இந்தப் பணியை மேற்கொள்வோம்."

இந்த பேட்டி, கட்சியின் தலைமைக்கு ஒரு பகிரங்கமான அழுத்தத்தை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமியின் மிக நெருக்கமான வட்டாரத்தில் இருந்து இத்தகைய ஒரு கருத்து வந்தது, அதிமுகவில் உள்ள ஒற்றுமை குறித்த விவாதங்களை மீண்டும் தொடங்கி வைத்தது.செங்கோட்டையனின் இந்த பேட்டி, பல யூகங்களுக்கு வழிவகுத்தது:

இது எடப்பாடி பழனிசாமியின் நேரடி உத்தரவு இல்லாமல் செங்கோட்டையன் சொந்தமாக எடுத்த முடிவாக இருக்காது என்றும், கட்சிக்குள்ளே உள்ள மூத்த தலைவர்களின் கூட்டு முடிவாக இது இருக்கலாம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
செங்கோட்டையனின் பேச்சு, குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரைச் சேர்ந்தவர்களுக்கும், அவர்களது ஆதரவாளர்களுக்கும் ஒரு மறைமுகமான அழைப்பாகப் பார்க்கப்படுகிறது.

செங்கோட்டையனின் இந்த பேட்டி, கட்சியை மீண்டும் ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில் ஓபிஎஸ் அணியுடன் பேசுவதற்கு இது ஒரு முதல்படியாக இருக்கலாம். செங்கோட்டையனின் இந்த பேட்டி, அதிமுகவின் அரசியல் களத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம், கட்சி ஒற்றுமைக்கான முயற்சிகள் மீண்டும் தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசாரத்திற்காக சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கேயே கட்சி நிர்வாகிகளான கே.பி. முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம். இந்த ஆலோசனையில் செங்கோட்டையன் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்பு குறித்து யோசனை நடத்தி வருகிறார்களாம்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *