ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் அரையிறுதிக்கு யூகி பாம்ப்ரி ஜோடி முன்னேற்றம்!

top-news
FREE WEBSITE AD

ஏ.டி.பி., டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு யூகி பாம்ப்ரி ஜோடி முன்னேறியது.

சுவிட்சர்லாந்தின் ஆண்களுக்கான ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு காலிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற, இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஜோடி, நெதர்லாந்தின் மேட்வே மிடில்கூப், உக்ரைனின் டென்ஸ் மோல்சனோவ் ஜோடியை சந்தித்தது.

முதல் செட்டை பாம்ப்ரி ஜோடி 6-3 என எளிதாக கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் அசத்திய பாம்ப்ரி ஜோடி 6-4 என வசப்படுத்தியது. 58 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் பாம்ப்ரி ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *