யோவின் கணவர் நிறுவன விவகாரம்... ஊழல் நிகழ்ந்ததற்கான எந்தவொரு முகாந்திரமும் இல்லை! - டான்ஸ்ரீ அசாம் பாக்கி

top-news
FREE WEBSITE AD

கோத்தா கினபாலு, ஜூன் 11: இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா யோவின் கணவருக்கு வழங்கப்பட்ட டிமாண்ட்-ரெஸ்பான்சிவ் டிரான்சிட் (டிஆர்டி) திட்டம் குறித்து இன்னும் விசாரணைகள் நடந்து வருவதாக டான்ஸ்ரீ  அசாம் பாக்கி கூறினார்.

யோவின் கணவர் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் நிறுவனத்திற்கு இந்தத் திட்டத்தை வழங்குயதில் சிலாங்கூர் அரசாங்கம் பயன்படுத்திய செயல்முறையை கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

இதுவரை ஊழல் நிகழ்ந்ததற்கான எந்த ஒரு முகாந்திரமும் காணப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். இருப்பினும், குத்தகை நடைமுறையில் சிக்கல்கள் இருந்தால், நாங்கள் அதை கவனிப்போம்," என்று அவர் கூறினார்.

குத்தகைகளை வழங்குவதில் உள்ள அமைப்பு மற்றும் நடைமுறைகளில் பலவீனத்தை கண்டறிந்தால், எம்ஏசிசி மாநில அரசு அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஆலோசனைக் கடிதத்தை வழங்கலாம் என்று  அசாம் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *