நேற்று சுபாங் ஜெயா பெட்ரோல் நிலையத்தில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் கைது!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஆகஸ்ட் 8: சுபாங் ஜெயாவில் கெசாஸ் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு முன்பாக நேற்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

30 முதல் 41 வயதுடைய சந்தேக நபர்களை ஷா ஆலம் மற்றும் கிள்ளான் ஆகிய இடங்களில் நேற்று மாலை 5.30 மணியளவில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு டி9, சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தால் கைது செய்ததாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நான்கு சந்தேக நபர்களுக்கும் முந்தைய குற்றவியல் மற்றும் போதைப்பொருள் பதிவுகள் உள்ளன. மேலதிக விசாரணைக்காக அவர்கள் இன்று ஷா ஆலம் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

 அவர்களிடமிருந்து கார், மோட்டார் சைக்கிள் மற்றும் ஆறு மொபைல் போன்களும் கைப்பற்றப்பட்டதாக ஹுசைன் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *