வேலை காப்பீட்டுத் திட்டத்தை கிக் தொழிலாளர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்து பெர்கேசோ ஆய்வு செய்கிறது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ.7-

வேலை காப்பீட்டுத் திட்டத்தை கிக் தொழிலாளர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்து பெர்கேசோ ஆய்வு செய்கிறது என மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை தற்போது வேலை வாய்ப்பு காப்பீட்டுத் திட்டம் கிக் தொழிலாளர்களுக்கு நீட்டிக்கப்படவில்லை.

ஆனால் இந்தத் திட்டம் அல்லது கிக் தொழிலாளர்களுக்கான இதே போன்ற திட்டத்தின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய பெர்கேசோவுக்கு உத்தரவிட்டுள்ளேன். மக்களவையில் அமைச்சிற்கான பட்ஜெட் 2026 கூறினார்.மீதான விவாதத்தை நிறைவு செய்யும் போது அவர் இவ்வாறு கூறினார்.

வேலை இழந்த தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக பெர்கேசோவின் கீழ் ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். இதற்கிடையில் பெர்கேசோவின் சுய வேலை வாய்ப்பு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மொத்தம் 846,907 பேர் பங்களித்துள்ளனர்.கடந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 290,122 பேர் மின் அழைப்புகள், இதர அழைப்புகள் மூலம் பங்களித்துள்ளதாகவும் சிம் கூறினார்.

சுய வேலைவாய்ப்பு சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2017 இன் விதிகளின் கீழ் சுயதொழில் செய்பவர்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்காக இந்தத் திட்டம் நிறுவப்பட்டது.மலேசியாவில் உள்ள தொழிலாளர்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதையும், சீரான, போட்டித்தன்மை வாய்ந்த பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படுவதையும் உறுதி செய்வதற்காக தொழிலாளர் சந்தையில் விரிவான சீர்திருத்தங்களைச் செயல்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக சிம் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *