கிரீக் விபத்து - ஓட்டுநருக்கு 18 சம்மன்கள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 10: நேற்று கிரீக்கில் உப்சி பல்கலைக்கழக மாணவர்களை 15 பேரைப் பலிகொண்ட விபத்தில் தொடர்புடைய பேருந்து ஓட்டுநருக்கு 18 போக்குவரத்து சம்மன்கள் அனுப்பப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

13 சம்மன்கள் வேகமாக வாகனம் ஓட்டியதற்காகவும், மூன்று சீட் பெல்ட் அணியாததற்காகவும், ஒன்று மூன்றாவது பிரேக் லைட் இல்லாததற்காகவும், மற்றொன்று முந்தைய விபத்தில் ஈடுபட்டதற்காகவும் அனுப்பப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் யூஸ்ரி ஹசன் பாஸ்ரி தெரிவித்தார்.

முன்னதாக, விபத்து குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு பணிக்குழு அமைக்கப்படும் என்று யூஸ்ரி அறிவித்தார். இதில் காவல்துறை, மலேசிய சாலை பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம், சாலை போக்குவரத்துத் துறை, நில பொது போக்குவரத்து நிறுவனம் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகள் இடம்பெறும் என்று அவர் கூறினார்.

விசாரணை ஆவணங்கள் விரைவில் முடிக்கப்படும் என்றும், தங்கள் விசாரணை முழுமையானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் ஓட்டுநரின் கடந்தகால குற்றங்கள், பின்னணி, செயல்பாடுகள் மற்றும் தொழில் வரலாறு உட்பட அனைத்து அம்சங்களையும் ஆராய்வோம் என்று அவர் விளக்கினார்.

Pemandu bas yang terlibat dalam kemalangan tragis di Greece menerima 18 saman trafik termasuk 13 kerana memandu laju. Polis akan menyiasat latar belakang dan rekod pemandu. Pasukan khas turut ditubuhkan untuk menyiasat kejadian ini secara menyeluruh.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *