பெர்சாத்து விலகி இருப்பதே நல்லது! - குவா மூசாங் பாஸ் தலைவர்

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 4:  வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கிளந்தான் மாநிலத்தின் நெங்கிரி சட்டமன்ற  இடைத்தேர்தலுக்காக மூன்று வேட்பாளர்களின் பெயர்கள் மாநிலத் தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குவா மூசாங் பாஸ் தலைவர் அஸ்மான் அஹ்மட் தெரிவித்துள்ளார்.

முன்மொழியப்பட்ட வேட்பாளர்கள் உள்ளூர் மற்றும் அப்பகுதியில் உள்ள கட்சித் தலைமையின் ஒரு பகுதியாக உள்ளனர் என்று அவர் கூறினார்.

பெர்சாத்து வேட்பாளரை நிறுத்தினால்  வாக்காளர்கள் மத்தியில்  அதிருப்தி ஏற்படும் என்று குறிப்பிட்ட அவர், எனவே பெர்சாத்து விலகி, PAS கட்சியை அந்த இடத்தில் போட்டியிட அனுமதிப்பார்கள் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *