நபரைக் காணவில்லை... 4 முதலைகள் பிடிபட்டன!

top-news
FREE WEBSITE AD

கோத்தா கினாபாலு, செப் 16: சபாவின் வடக்கு கோத்தா மருது மாவட்டத்தில் கம்போங் மருது ஆற்றில் இருந்து நான்கு முதலைகள் பிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த புதன்கிழமையிலிருந்து நபர் ஒருவரைக் காணவில்லை என்ற புகாரை அடுத்து வனவிலங்கு துறை மேற்கொண்ட நடவடிக்கையில் அவை பிடிக்கப்பட்டன.

முதலைகள் 1.5 மீ முதல் 3.6 மீ வரை நீளம் கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

35 வயதான ரசிஸ் அமாத் என்பவர் தனது 17 வயது மருமகனுடன் நீந்திக் கொண்டிருந்தபோது புதன்கிழமை திடீரென காணாமல் போனார்.

அவர் முதலையால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. இந்நிலையில் அவரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *