பெட்டாலிங்ஜெயா PUSPAKOM ஆகஸ்ட் 31 முதல் மூடப்படுகிறது!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 20: நாட்டின் வாகன ஆய்வுத் துறையில் சந்தை தாராளமயமாக்கலை  அடிப்படையாகக் கொண்டு மாற்றத்தின் ஒரு பகுதியாக, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கணினிமயமாக்கப்பட்ட வாகன சோதனை ஆய்வு மையமான புஸ்பகாம் கிளை ஆகஸ்ட் 31 முதல் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கிளையை மூடுவது புஸ்பகோமின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும், வாடிக்கையாளர்கள் உயர்தர சேவையைப் பெறுவதை உறுதி செய்வதற்கும் மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று நிறுவனம் கூறியது.

பெட்டாலிங் ஜெயா கிளையை மூடுவது ஒரு மூலோபாய நடவடிக்கை என்ற்ய்ம், இது சேவையின் தரத்தை பாதிக்காது என்றும் புஸ்பகம் தலைமை நிர்வாக அதிகாரி மஹ்மூத் ரசாக் பஹ்மான் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக செப்டம்பர் 2 முதல் அதன் க்ளென்மேரி கிளையில் ஒவ்வொரு நாளும் செயல்படும் நேரத்தை நீட்டிக்கும் என்று புஸ்பாகோம் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள்  சிரமம் உணர்ந்து காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை கிளை திறக்கப்பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.

வாகன உரிமையாளர்கள் புஸ்பகோமின் வாடிக்கையாளர் சேவை லைனை 03-51017000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.puspakom.com.my என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அதன் அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தில் சமீபத்திய அறிவிப்புகளைப் பெறலாம்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *