மலேசியாவில்தான் பெட்ரோல் விலை குறைவு! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, ஏப் 25: உலகளாவிய விநியோக நெருக்கடி இருந்தபோதிலும், தென்கிழக்கு ஆசியாவில் எரிபொருள் பங்கீட்டை அமல்படுத்தாத ஒரே நாடு மலேசியாதான் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இப்பகுதியில் உள்ள பல அண்டை நாடுகள் இத்தகைய நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன என்றும், சில நாடுகள் பற்றாக்குறை காரணமாக 400 பெட்ரோல் நிலையங்கள் வரை மூடியுள்ளன என்றும் அவர் கூறினார்.

ஒரு லிட்டர் RON95 பெட்ரோலின் விலை RM1.99 என்பது உலகின் மிகக் குறைந்த விலைகளில் ஒன்றாகும் என்றும், அதேசமயம் சில அண்டை நாடுகளில் இதன் விலை ஒரு லிட்டருக்கு RM10.50 ஆகவும், மற்ற நாடுகளில் RM4 மற்றும் RM6 ஆகவும் உயர்ந்துள்ளது என்றும் அன்வார் கூறினார்.

ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் 6ஆம் படிவ மைய மாணவர்களிடம் பேசிய அன்வார், அரசாங்கம் எடுத்த முன்கூட்டிய நடவடிக்கைகளால் எரிபொருள் பங்கீடு தேவைப்படவில்லை என்று கூறினார்.

குறிப்பிட்ட இலக்குகளில் மானியங்களைச் செயல்படுத்துதல் மற்றும் ஈரானுடனான நல்லுறவு ஆகியவை அத்தகைய நடவடிக்கைகளில் அடங்கும். இந்த நல்லுறவு, மலேசிய எரிபொருள் டேங்கர்கள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல அனுமதித்துள்ளது என்று தெரிவித்தார்.

மலேசியக் கப்பல்கள் ஜலசந்தி வழியாகச் செல்லவில்லை என்று கூறிய எதிர்க்கட்சி உறுப்பினர்களை அன்வார் விமர்சித்தார். உண்மைகளைத் தேடுவதில் நேர்மை இல்லாததையே இது காட்டுகிறது என்று சாடினர்.

மேலும், சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, தற்போதைய பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளுமாறு அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *