டிரம் தோம்பை டாங்கியாகப் பயன்படுத்தி பெட்ரோல் கடத்தல்!

top-news
FREE WEBSITE AD

கோத்தா பாரு, ஜூலை 4: டிரம் தோம்புகளை மாற்றி அமைத்து.  காரினுள் மாற்றி அமைக்கப்பட்ட எண்ணெய் டாங்கியாகப்
பயன்படுத்தி ரோன்95 ரக பெட்ரோலைக் கடத்தும் கும்பலின்
நடவடிக்கையை அதிகாரிகள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

தும்பாட், பெங்காலான் குபோர் மூன்றாவது பிராந்திய கடல் போலீஸ் குழு
இரு புரோட்டோன் வீரா ஏரோபேக் கார்களில் நடத்திய சோதனையில்
இந்த கடத்தல் தந்திரம் வெளிச்சத்திற்கு வந்தது தெரிய வந்துள்ளது.

கார்களைச் சோதனையிட்டதில் கூடுதலாக தலா 200 லிட்டர் பெட்ரோல் இருப்பது
கண்டறியப்பட்டது.

இந்த பெட்ரோல் எல்லையிலிருந்து 25 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்திலுள்ள பெட்ரோல் நிலையங்களில் வாங்கப்பட்டிருக்கலாம்
என சந்தேகிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த 400 லிட்டர் பெட்ரோலும் பின்னர் பிளாஸ்டி டிரம்களில் நிரப்பப்பட்டு
படகுகள் மூலம் அண்டை நாட்டிற்குக் கடத்தப்படவிருந்ததும் தெரிய வந்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *