கோலகுபு பாருவைத் தக்கவைப்போம்!- அமிருடின் ஷாரி

top-news
FREE WEBSITE AD

நாளை நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் கோல குபு பாரு தொகுதியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவரும், சிலாங்கூர் மந்திரி பெசாருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

நமது பிரச்சாரம் சிறப்பான முறையில் உள்ளது. விழுக்காட்டின் அடிப்படையில் பார்க்கையில் கோல குபு பாரு தொகுதியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளை கோலகுபு பாரு பகுதியில் பிற்பகல் வேளையில் மழை பெய்யும் சாத்தியம் இருப்பதால், காலையிலே வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்திவிடும்படி  அவர் கேட்டுகொண்டுள்ளார்.

கோல குபு பாரு மினி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்ற கோல குபுபாரு இடைத் தேர்தலுக்கான பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின்
மாபெரும் இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *