ஒன்றாக மாற்றத்தை ஏற்படுத்துவோம்! இளைஞர்களுக்கு அன்வார் அழைப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்: இளைஞர்கள்  எழுச்சியுடன் செயல்பட்டு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்  அழைப்பு விடுத்துள்ளார்.

இளைஞர்கள்,, மனிதாபிமான காரணங்களுக்காகப் போராட வேண்டும் மற்றும் சுற்றுச்சூழல் அழிவு, ஊழல் போன்ற பிரச்சினைகளை வலுவான கொள்கைகள் கொண்டு தீர்க்க வேண்டும் என்று அன்வார் கூறினார்.

வளங்கள், தொழில் மற்றும் வளர்ச்சியுடன் பல நாடுகள் உள்ளன, ஆனால் பெண்கள் தொடர்ந்து வறுமையை அனுபவித்து வருகின்றனர்.

சுதந்திரம், நீதி மற்றும் மனிதாபிமானத்தில் நம்பிக்கை கொண்ட, சிந்தனைகள், இலட்சியங்கள் மற்றும் கொள்கைகள் கொண்ட ஆற்றல் மிக்க இளைஞர்கள் நமது சமூகத்திற்குத் தேவை என்று
உலக வர்த்தக மையத்தில் நேற்று  இரவு நடைபெற்ற சர்வதேச இளம் எதிர்கால தலைவர்கள் உச்சி மாநாடு 2024 இன் தொடக்க விழாவில் அவர் தெரிவித்தார்.

ஒன்றாக, நாம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *