மலேசியா தலைமையில் ஆசியான் தொடர்புகளை உருவாக்குவோம்! - புடின்

top-news
FREE WEBSITE AD

விலாடிவோஸ்டோக், செப் 5: ரஷ்யாவுக்கும் மலேசியாவுக்கும் இடையேயான வர்த்தகம் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை (US$1= RM4.3505) நெருங்கி வருவதாகவும், மேலும் அதை விரிவுபடுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டில் மலேசியா ஆசியான் தலைவராக வரும்போது, ​​ஆசியானுடன் புதிய தொடர்புகளை ரஷ்யா உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் புடின் கூறியதாக Kremlin.ru ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆசியான் உடனான உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ள புடின், மேலும்,அடுத்த ஆண்டு, மலேசியா இந்த அமைப்பில் தலைமை தாங்கும், மலேசியாவின் தலைமையில்,  உலகின் வளர்ந்து வரும் ஆசிய பிராந்தியத்துடன் புதிய தொடர்புகளை தாங்கள் கண்டுபிடிப்போம்  என்று புடின் கூறியதாக  Kremlin.ru மேற்கோளிட்டுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் புதன்கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

 பிரதமர் இன்று 9 வது கிழக்கு பொருளாதார மன்றத்தின் (EEF) முழு அமர்வில் உரையாற்றுவார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *