வங்க தேசத்தில் இருந்து நம் மாணவர்களை மீட்டு வருவதே சிறந்தது! - அன்வார்

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், ஜூலை 22: வங்கதேசத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, நாட்டிலுள்ள அனைத்து மலேசிய மாணவர்களையும் வெளியேற்றுவதே சிறந்தது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.

அந்நாட்டின் சமீபத்திய நிலைமை குறித்து வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசன் தன்னிடம் விளக்கியதாக அன்வார் கூறினார்.

 நம் மாணவர்கள், அது அரசாங்கத்தின் உதவியின் கீழ் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்களை வெளியேற்றுவதற்கு உதவுவோம்.

முதல் சில நாட்களில், நிலைமை  கட்டுக்குள் இருப்பதாகத் தோன்றியது. இருப்பினும், சமீபத்திய தகவல்களின் அடிப்படையில், அவர்களை வீட்டிற்கு அழைத்து வருவதே சிறந்தது என்று அவர் இன்று தேசிய வரி மாநாடு 2024 க்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *