திறந்த வெளியில் புதைக்கப்பட்ட கரு... இளம்பெண்கள் அதிர்ச்சி!

top-news
FREE WEBSITE AD

கோத்தா கினாபாலு, ஜுன் 20: இனானம், ஜாலான் துவாரன், 5½ மைலில் உள்ள ஒரு திறந்தவெளியில், கருவைப் புதைத்துள்ளதை அதிர்ச்சியூட்டும் வகையில் மூன்று இளம்பெண்கள் கண்டுபிடித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் மழை பெய்து கொண்டிருந்த போது ஓர் ஆணும் பெண்ணும் பை மற்றும் மண்வெட்டியை எடுத்துச் செல்வதைக் கண்டதாக சிறுமிகளில் ஒருவர் கூறினார்.

சந்தேகத்தின் பேரில், அவர்களை விசாரணை செய்து மண்ணைத் தோண்டியதில், மூட்டையில் சுற்றப்பட்ட கருவை அந்த இளம்பெண்கள் கண்டுபிடித்து, உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் காசிம் முடா இதனை உறுதி செய்தார்.

மேலதிக ஆய்வுக்காக சபா போலிஸ் படைத் தலைமையகத்தின் தடயவியல் பிரிவு உட்பட போலிஸ் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.

பின்னர் மேல் விசாரணைக்காக ராணி எலிசபெத் I மருத்துவமனைக்கு கரு அனுப்பப்பட்டது. பிறப்பை மறைத்ததற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 318 இன் கீழ் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *