வேறொரு நபரின் MyKad வைத்து பாதுகாவலர் பணி செய்த எழுவர் கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 6: சிலாங்கூர்  பூச்சோங்கில், வேறொரு நபரின் MyKad மற்றும் போலி அடையாள அட்டைகளை வைத்திருந்த ஏழு பாதுகாவலர் பணி செய்யும் நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

தேசியப் பதிவுத் துறை (NRD) மற்றும் அமலாக்கப் பிரிவுகளின் இரண்டு வார கண்காணிப்பைத் தொடர்ந்து இந்நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் ஆறு ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டனர்.

அனைத்து சந்தேக நபர்களும் போலி அடையாள அட்டைகள் மற்றும் வேறொருவரின் MyKad ஐ தங்கள் அடையாளமாகப் பயன்படுத்தி பாதுகாப்புக் காவலர்களாக பணிபுரிந்ததாக நம்பப்படுகிறது.

ச36 முதல் 62 வயதுடைய பிலிப்பைன்ஸ் குடிமக்களான அவர்கள், விசாரணைகளுக்கு உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது RM20,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *