நீர் மாசுபாட்டிற்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 25 : சிலாங்கூரில் சமீபத்திய நீர் மாசுபாட்டிற்கு காரணமானவர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனைகளை சந்திக்க நேரிடும் என்று சிலாங்கூர் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

சிலாங்கூரில் நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்படுவதற்கு வழிவகுத்த துர்நாற்றம் தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை (DoE) நேற்று உறுதிப்படுத்தியது.

சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின் 25வது பிரிவின் கீழ் குற்றவாளிகளுக்கு ஐந்தாண்டுகள் வரையிலான கட்டாயச் சிறைத்தண்டனையும் RM10 மில்லியன் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என்று ஜமாலியா கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *