கட்டுப்பாடற்ற செலவீன சிக்கல்களுக்குத் தீர்வு காண புதிய செயலகம்! - பிரதமர் அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, செப்டம்பர் 3: கட்டுப்பாடற்ற செலவினங்களின் சிக்கல்களைத் தீர்க்க கூட்டாட்சி சட்டப்பூர்வ அமைப்புகளின் சீராய்வு குறித்து ஆய்வு செய்ய, அரசாங்கம் ஒரு செயலகத்தை நிறுவியுள்ளது என்று பிரதமர்  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

நிதியமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் அந்தச் செயலகம், அமைச்சரவையின் மேற்பார்வையில், சிவில் சேவையின் பெரிய அளவிலான சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக உடனடியாக அதன் பணிகளைத் தொடங்கும் என்று அன்வார் கூறினார்.

சட்டப்பூர்வ அமைப்புகளின் முறையை மேம்படுத்த நிதி அமைச்சகம் இருதரப்பு குழுவை அமைக்கும் என்று குறிப்பிட்ட அவர், மிகையான மற்றும் கட்டுப்பாடற்ற செலவினங்களைக் குறைக்கவும், ஒழுங்குபடுத்தவும் ஒன்றுடன் ஒன்று செயல்பாடுகளுடன் கூடிய பல சட்டப்பூர்வ அமைப்புகள் உள்ளதாக அவர் இன்று அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் கூறினார்.

அரசு நிதியைப் பயன்படுத்துவதில் துறைத் தலைவர்களும், அரசு ஊழியர்களும் சிக்கனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *