புதிய ஷா ஆலம் LRT3 ரயில் கோளாறு - ரேப்பிட் கேஎல் விளக்கம்

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம்: ஜூலை 4 அன்று, புதிய ஷா ஆலம் LRT3 வழித்தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், ரயிலின் ஒரு பாகம் மின் கடத்தியுடன் தொடர்பு கொண்டபோது நிகழ்ந்த சம்பவம் குறித்து  அந்நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஷா ஆலம் ஸ்டேடியம் நிலையத்தில் இரவு 7.05 மணிக்கு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தால், ஒரு சிறிய வெடிப்பு போன்ற சத்தமும் தீப்பொறிகளும் ஏற்பட்டதாகக் கூறியுள்ளது.

இருப்பினும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், ரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்ந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த ரயில் உடனடியாக சேவையிலிருந்து நிறுத்தப்பட்டு, பயணிகள் அடுத்த நிலையத்தில் இறக்கிவிடப்பட்டு, மற்றொரு ரயிலில் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர் என்று அது கூறியது.

பாதிக்கப்பட்ட ரயில் பின்னர் விரிவான ஆய்வுக்காகப் பணிமனைக்கு அனுப்பப்பட்டு, பழுதடைந்த பாகம் மாற்றப்பட்டது என்று ரேப்பிட் கே.எல் நிறுவனம் கூறியது.

ரயில் இயக்குவதற்குப் பாதுகாப்பானது என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்திய பின்னர், அது மீண்டும் சேவைக்கு அனுமதிக்கப்பட்டது என்று அந்நிறுவனம் கூறியது.

பயணிகளின் பாதுகாப்பே தங்களின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மற்ற ரயில்களிலும் ஆய்வுகளும் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் கூறியது.

LRT3 வழித்தடத்தை பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஜூன் 28 அன்று தொடங்கி வைத்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *