கப்பல்களைத் தீயிட்டுக் கொளுத்துவோம்" ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேறாது - ஈரான்!
- Muthu Kumar
- 03 Mar, 2026
மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இனி ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேற அனுமதிக்க மாட்டோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரானியப் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) மூத்த தளபதி பிரிகேடியர் ஜெனரல் இப்ராகிம் ஜப்பாரி, இந்த ஜலசந்தி அதிகாரப்பூர்வமாக மூடப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலும் ஈரானியப் படைகளால் தீயிட்டு கொளுத்தப்படும் என்றும் அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக ஈரான் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. உலகின் மொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 முதல் 25 சதவீதம் வரை இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது. எனவே, இந்த மூடல் நடவடிக்கையானது உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 200 டாலர் வரை உயரக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே 150-க்கும் மேற்பட்ட எண்ணெய் டேங்கர் கப்பல்கள் இந்தப் பாதையைக் கடக்க முடியாமல் நடுக்கடலில் நங்கூரமிட்டு காத்திருக்கின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



