அதிகமானப் பள்ளி நிகழ்ச்சிகளை நடத்துவது ஆசிரியர்களுக்குப் பணிச்சுமையா? - அமைச்சர் Fadhlina Sidek விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

பள்ளிகளில் விருப்ப ஓய்வைப் பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்துள்ளார். விருப்ப ஓய்வுப் பெறும் ஆசிரியர்கள் மீண்டும் பகுதி நேர ஆசிரியர்களாகவும் விண்ணப்பிக்கின்றனர் என அவர் தெரிவித்தார்.

ஓய்வுப்பெற்ற ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்தினால் அவர்கள் ஓராண்டு குத்தகைக்கு மட்டும்மே பணிக்கு அமர்த்தப்படும் சூழலை உருவாக்கினால், இளம் ஆசிரியர்களுக்குப் பணியிடங்களை வழங்க தாமதமாகாது என அவர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட சில பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் தவிர்த்து பள்ளி நிகழ்ச்சிகள் தொடர்பானப் பணிகளும் ஆசிரியர்கள் விருப்ப ஓய்வுப் பெறுவதற்கான முக்கிய காரணமாகத் திகழ்கிறது என கல்வி அமைச்சர் Fadhlina Sidek விளக்கமளித்தார். கல்வி அமைச்சின் நிகழ்ச்சிகளைக் காட்டிலும் ஒரு பள்ளியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதைக் கல்வி அமைச்சு வரவேற்றாலும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை நடத்தும் ஆசிரியர்களுக்கு இது பணிச்சுமையாகவும் பள்ளி நேரத்தைக் கடந்து அவர்கள் பணியாற்ற வேண்டிய சூழலை இதனால் ஏற்படுகிறது என கல்வி அமைச்சர் தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *