மலேசியக் கால்பந்து சங்கம் விளையாட்டு மறு ஆய்வு மன்றத்தில் முறையீடு

top-news

செய்தி- வெற்றி மைந்தன்

கோலாலம்பூர், டிச. 8-

மலேசிய கால்பந்து சங்கம் (FAM) FIFA-வால் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக விளையாட்டு மறுஆய்வு நீதிமன்றமான CAS-இல் (Court of Arbitration for Sport) முறையீடு தாக்கல் செய்துள்ளது. இது ஏழு பாரம்பரிய வீரர்களின் ஆவணங்களில் ஏற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்புபடுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

FAM தலைவர் டத்தோ மொஹ்த் யூசுப் மஹாதி இன்று வெளியிட்ட அறிக்கையில், “FIFA-வின் தண்டனை முடிவுகளுக்கு எதிராக CAS-இல் முறையீட்டை நாங்கள் தாக்கல் செய்துள்ளோம். CAS, FAM-ஐ பிரதிநிதித்துவம் செய்யும் வழக்கறிஞர்களுக்கு டிசம்பர் 18 வரை 10 நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளது. இந்தக் காலத்தில் முழுமையான எழுத்து வாதங்களை சமர்ப்பிக்க வேண்டும்” என்றார். அவர் மேலும், “இந்த மேல் முறையீட்டின் முன்னேற்றங்கள் குறித்து தகவல்கள் வழங்கப்படும்” என அவர் மேலும் சொன்னார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *