நிதி உரிமையை கேட்டால், இந்தியை ஏற்க வேண்டுமா- உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!

- Muthu Kumar
- 17 Feb, 2025
நிதி உரிமையை கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்பதா? என்றும், தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம் என்றும் ஒன்றிய அரசை உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதை நாம் அரசியலால் தூண்டப்பட்டு பேசுவதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்லி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
மொழி, இன உணர்வு வந்த பிறகுதான் தமிழர்களுக்கு அரசியலே வந்தது.எங்கள் இடுப்பில் கொள்கை எனும் வேட்டி ஏறிய பிறகுதான், தோளில் பதவி எனும் துண்டு வந்தது. நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா?தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்.
ரொம்பவும் வேண்டாம்,சுதந்திரத்துக்கு பிறகான தமிழ்நாட்டின் வரலாற்றைப் படித்தாலே இது உங்களுக்குப் புரியும். மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கியதுதான் ஒன்றிய அரசு. எங்கள் குழந்தைகளின் கல்விக்கான நிதியைதான் நாங்கள் கேட்கிறோம். நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம். தமிழ்நாடு பொறுக்காது. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *