தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் தங்க மோதிரம்!

top-news
FREE WEBSITE AD

தமிழ்நாட்டில் இந்த காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தமிழில் பெயர் வைப்பது என்பது அரிதுதான்.

வட சொற்கள் கலந்த பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அமைச்சர் சுப்பிரமணியன் இதற்காக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டினால் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்ற புதிய திட்டம் அமைச்சரால் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் ஒரே ஆண்டில் 5,600 குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது சென்னையில் உள்ள மகப்பேறு மருத்துவமனைகளில் மட்டுமே எடுத்த கணக்கெடுப்பு ஆகும். இந்தத் திட்டத்தை சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு வர விரைவில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *