567 பயணிகளுடன் கடலில் சிக்கிய கப்பல்! - PERLIS

top-news
FREE WEBSITE AD

567 பயணிகளுடன் பெர்லிஸ் கடல் வழியாக லங்காவிக்குப் பயணித்த கப்பல் மணல் திட்டில் சிக்கி பாதிப்புக்குள்ளானது.  நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கடலின் நடுவில் உள்ள மணல் திட்டில் சிக்கிய Langkawi Ferry Line Ventures க்குச் சொந்தமானச் சொகுசு கப்பல் இரவு 9.30 மணிக்கு மீட்கப்பட்டதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி  Baharin Baharom தெரிவித்தார். இழுவைப் படகின் உதவியுடன் கப்பலை மீட்டதாகவும் புயலின் காரணமாகக் கப்பல் மணல் திட்டில் சிக்கியதாகவும் அவர் விளக்கமளித்தார்.

KUALA PERLIS துறைமுகத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் இவ்விபத்து நிகழ்ந்ததாகச் செய்திகள் வெளியான நிலையில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் நாளை முதல் சொகுசு கப்பல் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *