ம.இ.கா வெளியேறினால் பாரிசானுக்கு மிகப்பெரிய அடி! - அரசியல் ஆய்வாளர் கருத்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 18: மஇகா பாரிசான் நேஷனலில் இருந்து வெளியேறினால், அது கூட்டணிக்கு மிகப்பெரிய அடியாக இருக்கலாம், ஏனெனில்  மலாய்க்காரர்களை மையமாகக் கொண்ட கூட்டணியாகக்  கருதப்படும் என்று ஒரு ஆய்வாளர் கூறுகிறார்.

மஇகா தேர்தல் ரீதியாக பலவீனமாக உள்ளது மற்றும் ஒரே ஒரு நாடாளுமன்ற இடத்தை மட்டுமே கொண்டுள்ளது என்றாலும், பல இன கூட்டணியாக மாற்றுவதற்காக பாரிசானை நிறுவிய கட்சிகளில. ம.இ.காவும்  ஒன்று என்று மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக அரசியல் அறிவியல் இணைப் பேராசிரியர் டாக்டர் சியாசா சுக்ரி கூறினார்.

மஇகா வெளியேற முடிவு செய்தால், அது  அம்னோ அல்லது மலாய்காரர்களை மையப்படுத்தப்பட்ட கூட்டணியாக பாரிசானை  மாற்றிவிடும என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது அனைத்து இனங்களையும் ஒன்றிணைக்கும் வாகனமாக இருக்க வேண்டிய பாரிசான் மீதான மக்களின் பார்வையை பாதிக்கும் என்று அவர் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *