9 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் செய்த அந்நிய நாட்டவர் கைது!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, செப் 22: ஸ்ரீ கெம்பாங்கனில் ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சந்தேகத்தின் பேரில் 35 வயது வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இரவு 11 மணியளவில் அச்சிறுமியின் தந்தை பணிபுரியும் இடத்திற்கு வெகு தொலைவில் அச்சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது அவரைத் துன்புறுத்தியதாக செர்டாங் காவல்துறைத் தலைவர் ஏ.ஏ.அன்பழகன் கூறினார்.

இதனை அடுத்து சந்தேக நபர் விரைவில் கைது செய்யப்பட்டார்.  அவரிடம் நடத்திய சோதனையில், அவரிடம் ஆபாசப் படங்கள் இருப்பதும், உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக அன்பழகன் கூறினார்

வரும் 27ம் தேதி வரை சம்பந்தப்பட்ட நபரைக் காவலில் வைக்க போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *