அவதூறு அறிக்கை வெளியிட்டதற்காக RM 25 மில்லியன் அக்மால் வழங்கவேண்டும்! - தெரேசா கோக் கோரிக்கை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 11: டிஏபி துணைத் தலைவர் தெரேசா கோக், அம்னோ இளைஞர் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் அக்மல் சலே, ஹலால் சான்றிதழ் தொடர்பாக தனக்கு எதிராக அவதூறான அறிக்கை அளித்ததற்காக 25 மில்லியன் நஷ்ட ஈடு கோரியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை டிக்டாக் வீடியோவில் டாக்டர் அக்மல் அவதூறாக பேசியதற்கு பதிலளிக்கும் வகையில், செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினரான தெரேசா கோக், இன்று மெசர்ஸ் எஸ்.என்.நாயர் & பார்ட்னர்ஸ் மூலம் வெளியிடப்பட்ட தனது கோரிக்கை கடிதத்தில் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

உணவகங்கள் மற்றும் உணவு நிறுவனங்களுக்கு ஹலால் சான்றிதழை கட்டாயமாக்குவது வர்த்தகர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என்று தெரேசா கோக் கூறியது தொடர்பாக  டாக்டர் அக்மல் விமர்சித்ததாக தெரிவிக்கப்பட்டது!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *