அங்கீகாரம் வழங்கப்பட்ட 5 ஆண்டுகளுக்குள் கோயில்கள் கட்டப்படாவிட்டால் அனுமதி மீட்டுக் கொள்ளப்படும்!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஜூலை 11-

இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்காக வழங்கப்பட்டுள்ள ஐந்தாண்டு கால அவகாசத்திற்குள் சம்பந்தப்பட்ட தரப்பினர் அவற்றை எழுப்பத் தவறினால், அதற்கான நில அங்கீகாரத்தை சிலாங்கூர் மாநில அரசாங்கத்தினால் மீட்டுக் கொள்ள முடியும்.

அவ்வாறு மீட்டுக் கொள்ளப்படும் நில அங்கீகாரம்,  தேவைப்படும் தரப்பினருக்கு வழங்கப்பட்டு விடும் என்று, மாநில ஊராட்சி மற்றும் சுற்றுலாத்துறை ஆட்சிக் குழுத் தலைவர் டத்தோ இங் சுயி லிம் தெரிவித்துள்ளார்.

“வழிபாட்டுத் தலங்களை எழுப்பும் நோக்கத்திற்காக, சிலாங்கூர் மாநில பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோ சமயங்களின் சிறப்புச் செயற்குழு, கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தளங்களுக்காக 400 நிலப்பகுதிகளை அங்கீகரித்திருக்கிறது.

'ஆதலால், வழிபட்டுத் தலங்களை எழுப்புவதற்காக நாங்கள் நிலத்தை வழங்கிய பின்னர் ஐந்து ஆண்டு காலகட்டத்திற்குள் அங்கு மேம்பாட்டுப் பணிகள் தொடரப்படாமல் இருந்தால், அந்நிலத்தை நாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்வோம்" என்று, நேற்று வியாழக்கிழமை நடந்த மாநில சட்டசபைக் கூட்டத்தில் இங் தெரிவித்தார்.

விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை எழுப்ப வழங்கப்பட்டுள்ள காலஅவகாசம் குறித்து தெரிந்து கொள்ள, சுங்கை பீலேக் சட்டமன்ற உறுப்பினர் லிவி கியான் கியோங் விரும்பியபோது இங் இதனைத் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MichaelExart

luxury car rental doha <a href=https://drivelity.com/car-rental-qatar>https://drivelity.com/car-rental-qatar</a>

KeithSmick

<a href=https://drivelity.com>rent car lamborghini dubai</a>