தாய்மொழிப் பள்ளிகளுக்கு அரசு நிதி வழங்கினால், மதுபான நிறுவனங்களிடம் பெற வேண்டியதில்லை!- பேராசிரியர் ராமசாமி

top-news
FREE WEBSITE AD

மதுபான நிறுவனங்கள் மூலம் தாய்மொழிப் பள்ளிகளுக்கு நிதியுதவி பெறுவது பற்றி பேசுவதை விட, அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தால் தாய்மொழிப் பள்ளிகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பது பற்றி பேச வேண்டும் என பேராசிரியர் டாக்டர் ராமசாமி  கருத்துரைத்துள்ளார்.

 

சீன மற்றும் தமிழ் தாய் மொழிப் பள்ளிகளுக்குத் தேவையான நிதியை அரசாங்கம் வழங்கினால், பள்ளிகள் மதுபான ஆலைகள் மற்றும் புகையிலை நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி பெற வேண்டிய அவசியமில்லை என்று  அவர் குறிப்பிட்டார்.

 

சீனப் பள்ளிகளுக்கு மதுபான நிறுவனம் நிதியுதவி செய்வதை எதிர்த்த பாஸ் கட்சியின்  தலைவர் இதைத்தான் முதலில் எழுப்பியிருக்க வேண்டும்.

 

மத்திய அரசின் நிதி இல்லாததால், மதுபான உற்பத்தி நிறுவனங்களில் இருந்து நிதியுதவி பெறப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 

பூமிபுத்ரா சமூகத்தினருக்கு கோடிக்கணக்கான நிதி செலவிடப்படும் போது, ​​நாட்டில் உள்ள தாய் மொழிப் பள்ளிகளுக்கு தேவையான நிதியை வழங்க அரசு ஏன் தயங்குகிறது. என்று கேள்வி எழுப்பிய அவர்,  மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின்சா ம்பியனான டிஏபி தலைவர்களால் ஏன் தன் மக்களின் கவலைகள் மற்றும் நலன்களை திறம்பட வெளிப்படுத்த முடியவில்லை என்று சாடினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *