PH வெற்றிபெற்றால் சுங்கை பக்காப்பில் நிச்சயம் தமிழ்ப்பள்ளி! - தியாகராஜ் சங்கரநாராயணன்

- Shan Siva
- 05 Jul, 2024
நிபோங் தெபால், ஜூலை 5: சுங்கை பக்காப்பில் PH வெற்றி
பெற்றால்,முதியோர்களுக்கான செயல்பாட்டு மையம் (PAWE) மற்றும் புதிய தமிழ்ப் பள்ளியை நிர்மாணிக்கும் அறிவிப்பையும் செய்துள்ள
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடிக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக, கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கர நாராயணன் தெரிவித்தார்.
தாம் ஒரு சுங்கை பக்காப்
வாக்காளர் என்ற முறையில், துணைப்
பிரதமரின் அறிவிப்பை வரவேற்பதாகவும், வாக்குகளைப் பெறுவதற்காக மக்களின் உணர்வுகளுடன்
விளையாடாமல், மக்களுக்குச் சேவை செய்வதில் அரசாங்கத்தின்
செயல்திறனுக்கான அளவுகோளாக இது இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மக்களின் உணர்வுகளைத் தூண்டாமல், மக்களுக்கு எது தேவை என்பதைத் தீர்மானித்து, தூரநோக்குச் சிந்தனையில் வாக்குறுதியளித்திருக்கும் துணைப்பிரதமரின் செயல்
பாராட்டுக்குரியது என்று அவர் தெரிவித்தார்.
சுங்கை பக்காப் இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானை வெற்றிபெறச் செய்ய வேண்டியது நம் இந்தியர்களின் பொறுப்பு. இது உள்ளூர் சமூகத்திற்கு செழிப்பை ஏற்படுத்தும். எனவே, வாக்காளர்கள் புத்திசாலித்தனமாக தீர்ப்பளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், வாக்குகளைப் பெறுவதற்காக இன மற்றும் மத உணர்வுகளைப்
பயன்படுத்தும் கட்சிகளால் எளிதில் நாம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
வாக்குறுதிகளை யார் நிறைவேற்றுவார்
என்பதை அறிந்து அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
சுங்கை பக்காப் தொகுதியில் மாற்றத்தைக்
கொண்டு வருவதற்கு நமக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிட வேண்டாம் என்று
நிபோங் தெபால் நாடாளுமன்ற மக்கள்
சேவை மையத்தின் சிறப்பு அதிகாரியுமான அவர் கேட்டுக்கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *