தைரியமிருந்தால் அனைத்து அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்யுங்கள்! - அக்மால் சலே

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 3: அம்னோ கட்சியின் கொள்கைகளுக்கு சவால் விடப்பட்டால், அரசாங்கத்தில் உள்ள அதன் கூட்டாளிகளிடமிருந்து வரும் அழுத்தங்கள் உட்பட எதற்கும் கட்சி அடிபணியாது என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சலே வலியுறுத்தியுள்ளார்.

நெகிரி செம்பிலானில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, ரந்தாவ் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் வெளியுறவு அமைச்சர் முகமது ஹசனை குறிவைத்து டிஏபி இளைஞர் பிரிவு விடுத்த கோரிக்கைகளை மேற்கோள் காட்டி, சமீபத்தில் அம்னோ தலைவர்களை அரசாங்கத்திலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும் சிலாங்கூர் பிகேஆர் தேர்தல் இயக்குனர் என். சத்யா பிரகாஷும். அம்னோவின் சுங்கை ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினர் ரிஸாம் இஸ்மாயிலை மாநில நிர்வாக கவுன்சிலர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தார். இத்தகைய அறிக்கைகள், அம்னோ கட்சி மீது அழுத்தம் கொடுக்க முடியும் என்ற தோற்றத்தை அளிப்பதாக அவர் கூறினார்.

அவர்கள் உண்மையிலேயே தைரியமானவர்கள் என்றால், ஒன்று அல்லது இரண்டு பேரை மட்டும் தேர்ந்தெடுக்காதீர்கள் – அனைத்து அம்னோ அமைச்சர்கள், பிரதிநிதிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களையும் பதவி நீக்கம் செய்யுங்கள் என்று அக்மால் தெரிவித்தார்.

அம்னோ பதவிகளை இழக்க நேரிடலாம் மற்றும் நண்பர்கள் மற்றும் எதிரிகள் இருவரிடமிருந்தும் அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடலாம், ஆனால் அது தனது கொள்கைகள் சமரசம் செய்யப்படுவதை ஒருபோதும் அனுமதிக்காது என்று கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற அம்னோவின் 80வது ஆண்டு நிறைவு மாநாட்டில் அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *