விபத்தில் குழந்தைகள் உட்பட 8 பேர் படுகாயம்!
- THINAGAREN SANGGAREN
- 22 Mar, 2026
மார்ச் 22,
கட்டுப்பாட்டை இழந்த இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். Gerik லிருந்து ஆயேர் பானாச் செல்லும் சாலையில் இன்று காலை 11.30 மணிக்கு விபத்து ஏற்பட்டதாக Perak மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.
கட்டுப்பாட்டை இழந்த Proton Saga வாகனம் எதிர்திசையில் வந்த Perodua Bezza வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தியதாக முதற்கட்ட விசாரையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் இரு வாகனத்திலும் இருந்த 8 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என Perak மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



