துருக்கி இளவரசர் கணக்கில் 486 மில்லியன் ரிங்கிட் பரிவர்த்தனைகளைத் தடுக்க எம்ஏசிசி உத்தரவைப் பெற்றது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 11-

துருக்கி இளவரசர் அப்துல்லா அப்துல் அஜீஸ் அல் சவுத்தின் கணக்கிலுள்ள 486 மில்லியன் ரிங்கிட் பரிவர்த்தனைகளைத் தடுக்க எம்ஏசிசி உத்தரவைப் பெற்றது.அக்டோபர் 7 ஆம் தேதி எம்ஏசிசி தாக்கல் செய்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து விசாரணை நடந்தது.

இதில் பணமோசடி தடுப்பு. பயங்கரவாத எதிர்ப்பு நிதி, சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமானம் 2001 சட்டத்தின் பிரிவு 53 இன் கீழ் கோலாலம்பூர் குற்றவியல் உயர் நீதிமன்ற நீதிபதி நூருல்ஹுடா நுரைனி முகமது நோர் இந்த தடை உத்தரவைப் பிறப்பித்தார்.

1 எம்டிபி நிதியை தனது வங்கிக் கணக்கு மூலம் தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் துருக்கி இளவரசர் அப்துல்லா அப்துல் அஜீஸ் அல் சவுத் வருமானத்தைப் பெற்று. மாற்றியமைத்து. பயன்படுத்தியதாக 2011ஆம் ஆண்டு பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டதாக எம்ஏசிசி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவின் மூலம். ஜேபி மோர்கனின் இரண்டு வங்கிக் கணக்குகளில் 87,148,732.89 மற்றும் 2,777,759.74 டாலர், யூஎஸ்பி சுவிஸ் வங்கிக் கணக்கில் 15,394,169 டாலர் மதிப்புள்ள பரிவர்த்தனைகளை எம்ஏசிசி தடுத்து நிறுத்தியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *