GISB தொடர்பாக 200 பேர் கைது! – காவல் துறை தலைவர் TAN SRI RAZARUDIN

top-news
FREE WEBSITE AD

சிறார் வன்கொடுமைகள் தொடர்பான Global Ikhwan Services and Business (GISB) Holdings நிறுவனத்திற்குச் சம்மந்தப்பட்ட 200 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தேசியக் காவல் படை தலைவர் TAN SRI RAZARUDIN தெரிவித்தார். Negeri Sembilan, Selangor மாநிலங்களில் இயங்கி வந்த பராமரிப்பு இல்லங்களில் 18 வயதுக்கும் குறைவானச் சிறுவர்கள் மீட்கப்பட்ட வழக்கின் விசாரணைக்காக உதவும் வகையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுவரையில் Global Ikhwan Services and Business (GISB) Holdings நிறுவனத்திற்கு எதிராக 37 குற்றப்பத்திரிக்கைகள் ஆவணங்களுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Global Ikhwan Services and Business (GISB) Holdings நிறுவனத்தின் கீழ் இயங்கும் சமூகநல இயக்கத்துடன் தொடர்புடைய 31 பேரும் இக்குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகப் பெறப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நேரடியாக இந்நிறுவனத்துடன் தொடர்பில்லை என்றாலும் அவர்கள் ஊழியர்களாகவும் தனிநபர்களாகவும் தொடர்பிருப்பதாக TAN SRI RAZARUDIN தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *