ஹார்மூஸ் ஜலசந்தி பாதுகாப்பு: வளைகுடா நாடுகள் அமெரிக்காவுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் – டிரம்ப்

top-news
FREE WEBSITE AD

வாஷிங்டன், ஜூலை 14-

 உலகின் முக்கியமான கடல்வழித் தடங்களில் ஒன்றான ஹார்மூஸ் ஜலசந்தியைப் பாதுகாக்கும் பணிக்காக வளைகுடா நாடுகள் அமெரிக்காவுக்கு நிதி வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்துக்குப் பாதுகாப்பு வழங்குவதால் அமெரிக்காவுக்குப் பெரும் செலவு ஏற்படுவதாகத் தெரிவித்தார். இதற்கான நிதி இழப்பீட்டை அந்தப் பாதையால் பயனடையும் வளைகுடா நாடுகள் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அண்மையில் ஹார்மூஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்லவும் கடல்சார் பணியாளர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கவும் அமெரிக்கப் படைகள் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் ராணுவத் திறனைப் பலவீனப்படுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

மேலும், ஹார்மூஸ் ஜலசந்தியை அமெரிக்கக் கடற்படை மீண்டும் முற்றுகையிட்டு பாதுகாக்கும் என்றும், அந்தப் பகுதியைக் கடந்து செல்லும் கப்பல்களிடம் 20 சதவீதக் கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார். ஈரானின் ராணுவத் தளவாடங்களில் 84 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் வான் பாதுகாப்பு மற்றும் ஆயுதக் கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *