சானியா மிர்சாவின் காதலனாக நடிக்க ஆசை - ஷாருக்கான்!

top-news
FREE WEBSITE AD

இந்திய டென்னிஸ் விளையாட்டில் மகுடம் சூடப் பட்டவர்தான்  சானியா மிர்சா. உலகளவில் பல விருதுகள் , அங்கீகாரங்கள் என டென்னிஸ் விளையாட்டின் பெரிய பிரபலங்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இருவரும் துபாயில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இச்சூழலில் தான் சானியா மிர்சா சமீப காலமாக தனது கணவரிடம் இருந்து விலகி இருந்தார். இதனிடையே இவர்கள் விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின. அதேநேரம் இருவரும் அதைப் பற்றி எந்த கருத்துகளையும் கூறவில்லை.

பிரபல இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியான தி கிரேட் கபி ஷோ தற்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகத் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வரும் வாரம் சிறப்பு விருந்தினராக இந்திய விளையாட்டு விராங்கனைகளான சானியா மிர்சா , மேரி கோம் , சைனா நேவால் , ஸிஃப்த் கார் சம்ரா உள்ளிட்டவர்கள் கலந்துகொள்கிறார்கள். தனது திருமண விவாகரத்திற்கு பிறகு சானியா மிர்சா கலந்துகொள்ளும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி இதுவாகும். இந்த நிகழ்ச்சியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை உட்பட கலகலப்பாக பல விஷயங்களை பேசியிருக்கிறார் சானியா மிர்சா.

இந்த நிகழ்ச்சித் தொகுப்பாளரான கபில் ஷர்மா ஷாருக் கான் முன்பு ஒரு முறை தெரிவித்த ஆசையை சானியாவிடம் தெரிவித்தார். சானியா மிர்சாவின் வாழ்க்கை படமானால் அதில் அவரது காதலனாக தனக்கு நடிக்க வேண்டும் என்று தனது ஆசையை ஷாருக் கான் வெளிப்படுத்தி இருந்தார். இதற்கு பதிலளித்த சானியா மிர்சா அதற்கு நான் முதலில் ஒரு காதலை தேட வேண்டுமே என்று குறும்புத் தனமாக பதிலளித்துள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் விளம்பரம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *