நாட்டைச் சீரழித்த அன்வார்! – HAMZAH ZAINUDIN
- Thinagaren Sanggaren
- 18 Jul, 2025
ஜூலை 18,
அன்வரின் ஆட்சியில் மலாய்க்காரர்கள் ஒதுக்கப்படுவதாகவும் நாட்டின் தலைமை பொறுப்புகளிலிருந்து மலாய்க்காரர்கள் ஓரங்கட்டப்பட்டிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவரும் பெரிக்காத்தான் துணைத் தலைவருமான Datuk Seri Hamzah Zainudin குற்றம் சாட்டியுள்ளார். பொய்யான வாக்குறுதிகளால் அன்வார் தேர்தலை எதிர்கொண்டு இப்போது மலாய்க்காரர்களுக்கு எதிராகவும் மலாய்க்காரர்களின் எதிர்காலைத்தைச் சீரழிக்கும் வகையிலும் ஆட்சி நடத்தி வருவதாக Datuk Seri Hamzah Zainudin தெரிவித்தார்.
நாட்டின் குடிமக்களுக்கும் பூமிபுத்ராக்களுக்குமான வேறுபாட்டை அன்வார் மறந்து விட்டதால் நாட்டின் அதிகாரப்பூர்வ இனமான முதன்மை இனமான மலாய்க்காரர்களுக்கு எதிரான ஓர் ஆட்சியை அன்வார் நடத்தி வருவதாக Datuk Seri Hamzah Zainudin தெரிவித்தார். இது மலாய்க்காரர்களின்ன் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றும் அடுத்த 10 ஆண்டுகளுக்கும் வறுமையின் உச்சத்தில் மலாய்க்காரர்கள் அவதிப்படுவார்கள் என்றும் Datuk Seri Hamzah Zainudin சுட்டிக்காட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



