பிரதமருக்கு நன்றி! - சனூசி

top-news
FREE WEBSITE AD

பெண்டாங், செப் 22: கெடா, மாநிலத்தில் வெள்ளச் சீரமைப்பு மற்றும் இழப்பீடுக்காக ஒதுக்கப்பட்ட RM13 மில்லியனுக்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சானுசி முகமட் நோர் நன்றி தெரிவித்தார்.

இருப்பினும்,  திங்கள்கிழமை முதல் வெள்ளத்தால் ஏற்பட்ட  சேதத்தை இந்த நிதி முழுமையாக ஈடுசெய்யாது என்று அவர் கூறினார்.

மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட்டதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் மேலும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும்  பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்

RM13 மில்லியன் இந்த ஆரம்ப ஒதுக்கீடு மிகவும் பாராட்டுக்குரியது. ஆனால் அது போதுமானதாக இருக்காது என்பதால் கூடுதல் நிதியை தாங்கள் எதிர்பார்ப்பதாக  அவர் இன்று SMK Tanah Merah தற்காலிக வெள்ள நிவாரண மையத்தில் வெள்ளத்தால் பாதிகப்பட்டவர்களைப் பார்வையிட்ட பிறகு கூறினார்.

மீட்பு முயற்சிகளை மேலும் ஆதரிக்க, கூடுதல் நிதியை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று தாம் நம்புவதாக சனுசி  தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *