மலேசிய பிரதமருக்கும், இந்திய பிரதமருக்கும் நன்றி! - ஓம்ஸ் பா.தியாகராஜன்

top-news
FREE WEBSITE AD

மலாயாப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் பெயரில் இருக்கையை அமைப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ள நம் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும், அத்திட்டத்தை முன்மொழிந்திருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநரும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.
உலகின் சிறந்த நீதி நூலாக விளங்கும் திருக்குறளுக்கு இதன் வழி மோடியும் நம் பிரதமரும் பெரும் தொண்டாற்றியுள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், நமது பிரதமருக்கு தமிழ் மீதும், திருக்குறள் மீதும் எப்போதும் தனிப்பட்ட பாசம் உண்டு என சுட்டிக்காட்டினார்.
டத்தோஸ்ரீ அன்வார் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது திருக்குறள் மாநாட்டில் வந்து கலந்துகொண்டதை நினைவுகூர்ந்த ஓம்ஸ் பா.தியாகராஜன், 11-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிலும், பட்ஜெட் வாசிப்பின் போதும் திருக்குறளை எடுத்துக்காட்டிக் கூறியது, திருக்குறள் மீதான அவரின் நேசத்தைக் காட்டுகிறது என்று கூறினார்.
அன்வாரின் ஆட்சிக் காலத்தில் திருவள்ளுவர் பெயரில் இருக்கை அமைவது வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்பதோடு. திருக்குறளின் மேன்மை என்றென்றும் மலேசியாவில் நிலைத்தும் நிற்கும் என்று ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *