மக்கள் தேவைக்கேற்ப கூட்டரசு பிரதேசத்தை நிர்வகிப்பேன்

top-news

புத்ராஜெயா, டிச. 22-

பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சரான ஹனா இயோ, கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவானில் நேர்மையாக நிர்வகிக்க உறுதியேற்பதாக தெரிவித்தார். அடிப்படை சேவைகள், மக்களின் உண்மையான தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்றும் கூறினார்.

ஹனா இயோ கூறுகையில், “கூட்டரசு பிரதேசத்தை அனைத்து வயது மக்களும் பாதுகாப்பாக வசிக்கவும், வேலை செய்யவும் ஏற்ற இடங்களாக மாற்றுவதே எனது விருப்பம்” என்றார்.அடுத்த சில நாட்களில், துணை அமைச்சர் டத்துக் லோ சூ பூயுடன் இணைந்து அமைச்சகத்தின் அனைத்து அதிகாரிகளிடமிருந்து அறிக்கைகளை கேட்டறிவோம் என்றார்.

பிரதமர் அன்வார் இப்ராஹிமின் சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தில், முன்னாள் இளைஞர், விளையாட்டு அமைச்சராக இருந்த ஹனா இயோ இப்புதிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *