நீண்ட நாட்களுக்கு பிறகு பாசத்தை பொழிந்து கொண்ட தனுஷ் மற்றும் சிம்பு!

top-news
FREE WEBSITE AD

நடிகர் தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆகாஷின் திருமண வரவேற்பு விழாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்டனர்.

இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. நடிகர் தனுஷ் தற்போது இயக்கி நடிக்கும் படம் 'இட்லி கடை'. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் மற்றும் தரணீஸ்வரி தம்பதிக்கு கடந்த வியாழக்கிழமை அன்று சென்னையில் திருமணம் நடைப்பெற்றது. முன்னதாக அந்த திருமணத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் தற்போது நடைப்பெற்ற ஆகாஷின் திருமண வரவேற்பு விழாவில் நடிகர்கள் சிம்பு மற்றும் தனுஷ் இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துள்ளனர். அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் - தரணீஸ்வரி தம்பதிகளின் திருமண வரவேற்பு விழாவில் நடிகர்கள் சிம்பு மற்றும் தனுஷ் இருவரும் சந்தித்து தங்களது அன்பைப் பரிமாறிக்கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *