குடியிருப்புப் பகுதியில் புலி! தேடுதல் வேட்டையில் அதிகாரிகள்!

top-news
FREE WEBSITE AD

PAHANG LIPIS பகுதியில் பூர்வக்குடியினர் அதிகம் வாழும் பகுதியான KAMPUNG SETIA சாலையோரத்தில் புலி ஒன்று ஓய்வெடுக்கும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட பகுதியில் வன அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

49 வயது NORFINI AJIK எனும் ஆடவருக்குச் சொந்தமான நிலத்தில் புலியின் காலடிதடங்கள் காணப்பட்டதாகவும் அடுத்தக்கட்ட சோதனைக்காகச் சுற்று வட்டாரத்தில் உள்ள பகுதிகளில் சோதனை நடத்தப்படுவதாகவும் பகாங் மாநில வனவிலங்கு மீட்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

20க்கும் மேற்பட்ட அதிகாரிகள்  புலியைத் தேடும் பணியை மேற்கொண்டுள்ளதாகவும் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களின் பாதுக்காப்பை உறுதிச் செய்து வருவதாகவும் பகாங் மாநில வனவிலங்கு மீட்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *