இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் - டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு?

top-news
FREE WEBSITE AD

கரூர் துயரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்ற விஜயிடம், பாஜக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.கரூர் துயர சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி, தவெக தலைவர் விஜய்க்கு மூன்றாவது முறையாக விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதற்காக டெல்லி சென்ற அவர் நேற்று காலை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவகலத்தில் ஆஜரானார்.

இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு அவரிடம் தொடங்கிய விசாரணை, மாலை சுமார் 5 மணி வரையில் நீடித்தது. அதன் பிறகு வெளியே வந்த விஜய் அங்கு கூடியிருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்தார். கடந்த முறையை போல தொடர்ந்து இரண்டாவது நாளும் அவரிடம் விசாரணை நடத்தப்படுமா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரவோடு இரவாக தனி விமானத்தில் விஜய் சென்னை திரும்பியுள்ளார். இதனால், நேற்றுடன் இரண்டாவது கட்ட சிபிஐ விசாரணை விஜயிடம் முடிவடைந்தது என்பது உறுதியாகியுள்ளது.

தவெக உடன் எந்தவித கூட்டணி பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை என அதிமுக மற்றும் தமிழக பாஜக தரப்பில் திட்டவட்டமாக கூறப்படுகிறது. ஆனால் அவரை எப்படியும் கூட்டணிக்குள் கொண்டு வரவேண்டும் என, டெல்லி பாஜக தரப்பு தீவிரம் காட்டுகிறதாம். இதுதொடர்பாக பல வடநாட்டு ஊடகங்களும் பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. தவெக நிர்வாகிகள் பலரும் வெற்றி பெற வேண்டுமானால், கூட்டணி வைப்பதே சரியான முடிவு என வலியுறுத்தியுள்ளனராம். ஆனால், பாஜக உடன் கூட்டணி வைத்தால் கட்சிக்கான எதிர்காலம் என்பதே கேள்விக்குறியாகிவிடும் என்பதே விஜயின் எண்ணமாக உள்ளதாம்.

டெல்லியின் அழுத்தத்தை சமாளிக்கும் விதமாகவும், கூட்டணிக்கும் செல்வதை தடுக்கவும் விஜய் தனது செயல்பாடுகளை நகர்த்தியுள்ளார். அதன்படி, 80 தொகுதிகளும், துணை முதலமைச்சர் பதவியும் தங்களுக்கு வழங்க வேண்டும் என கூறியுள்ளார். தனது கோரிக்கையை எடப்பாடி தரப்பு நிச்சயமாக ஏற்காது, அதனையே காரணம் காட்டி தான் கூட்டணிக்கு தயாராக இருப்பதாகவும், உங்களால் தான் எனது கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை என கூறி கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்கு விஜய் தரப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாம்.

விஜயின் கோரிக்கைக்கு பாஜக தரப்பு சரி என சொன்னாலும், அதிமுக தரப்பு முடியவே முடியாது என பதிலளித்துவிட்டதாக கூறப்படுகிறது. காரணம், விஜய்க்கு 80, பாஜகவிற்கு சுமார் 30 என கூட்டணி கட்சிகளுக்கே பெரும்பாலான தொகுதிகளை விட்டுக்கொடுத்தால், களமிறங்கும்போதே பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை காட்டிலும் குறைவான தொகுதிகளிலேயே அதிமுக போட்டியிட வேண்டி இருக்கும் என எடப்பாடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அப்படி நடந்து ஒரு வேளை ஆட்சி அமைத்தாலும், பீகாரில் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலை தனக்கும் ஏற்படாதா? என்றேல்லாம் யோசித்து வாய்ப்பே இல்லை என கூறியுள்ளாராம். விஜயின் புதிய கட்சிக்கு 25 தொகுதிகள் வேண்டுமானால் ஒதுக்கலாம் என கூறியுள்ளாராம். அதேநேரம், ஒருவேளை பாஜக இல்லாமல் விஜய் மட்டுமே நேரடியாக கூட்டணிக்குள் வந்து இருந்தால், நிச்சயமாக அவரது கோரிக்கைகளை ஏற்று, எடப்பாடி கூட்டணிக்குள் கொண்டு வந்து இருப்பார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்க உள்ளது. பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *