அது சிக்கலை ஏற்படுத்தக்கூடும்! முகைதீன் நினைவுறுத்து!

top-news
FREE WEBSITE AD

குவா மூசாங், ஆகஸ்ட் 15: பெரிகாத்தான் நேஷனல் தலைவர் முகைதின் யாசின், கூட்டணியின் தேர்தல் எந்திரம் தங்கள் வேட்பாளரான ரிஸ்வாதி இஸ்மாயிலுக்கான பிரச்சாரத்தில் முழு வீச்சில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு நாளுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், நெங்கிரி வாக்காளர்களின் பதில் மிகவும் ஊக்கமளிக்கிறது என்று அவர் கூறினார்.

உண்மையில், ஓராங் அஸ்லி கிராமங்கள் உட்பட, இதற்கு முன்னர் ஊடுருவ முடியாத பகுதிகளில், மக்கள் தங்களை வரவேற்றுள்ளனர் என்று கூறினார்.

கம்போங் லிமாவ் கஸ்தூரியில் வசிப்பவர்களைச் சந்தித்த பின்னர் அவர் இங்கு செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

ஆதரவு மிகவும் வலுவாக இருந்தாலும், வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்றால், வாக்குப்பதிவு சதவீதம் குறையும், அது சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் நினைவூட்டினார்.

 ரிஸ்வாடிக்கு பிரச்சாரத்திற்கு உதவுவதற்காக வெள்ளிக்கிழமை வரை நெங்கிரியில் இருப்பேன் என்று பெர்சாத்து தலைவரான முகைதீன் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *