குழியில் விழுந்த பெண் என்ன ஆனார்? செருப்பு மட்டுமே மிஞ்சியது! தொடரும் சோகம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆகஸ்ட் 24:  கோலாலம்பூர், ஜலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியில்   குழியில் விழுந்த இந்திய சுற்றுலாப் பயணியைத் தேடும் பணி கிட்டத்தட்ட இரு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சோகம் நீடிக்கிறது.

இப்போது வரை அந்த இடத்திற்கு அருகில் அவருக்குச் சொந்தமான ஒரு ஜோடி செருப்புகளை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்ததாக கோலாலம்பூர் காவல்துறை தலைவர் ருஸ்டி இசா தெரிவித்தார்.

இதனால் இன்னும் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

இதனை அடுத்து அந்தப் பகுதியில்  நடமாட்டத்தைக் குறைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா, ஆந்திரப் பிரதேசம், குப்பத்தைச் சேர்ந்த  48 வயது விஜயலெட்சுமி என்ற சம்பந்தப்பட்ட பெண் தனது குடும்பத்தினருடன், ஜாலான் மஸ்ஜித் இந்தியா, மலாயன் மேன்ஷன் முன்புறம் உள்ள பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது நேற்று இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *