ராகுல் காந்தி வியட்நாமுக்கு அடிக்கடி செல்லும் மர்மம் என்ன?

- Muthu Kumar
- 16 Mar, 2025
ராகுல் காந்தி வியட்நாமுக்கு அடிக்கடி செல்வதாகவும், அதன் மர்மம் என்ன என்றும் பாஜகவினர் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த ஜனவரி 1 ஆம் தேதி, புத்தாண்டு கொண்டாட ராகுல் காந்தி வியட்நாம் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால், அவர் தனது தொகுதி மக்களுடன் புத்தாண்டு கொண்டாடாமல், வியட்நாமில் ஏன் கொண்டாடினார் என்பது குறித்து பாஜக கேள்வி எழுப்பியது.தற்போது, நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடி வரும் நிலையில், ராகுல் காந்தி வியட்நாமில் ஹோலி பண்டிகையை கொண்டாடி உள்ளதாக பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பிறகு, ஹோலி பண்டிகை கொண்டாடவும் ராகுல் காந்தி வியட்நாமில் இருக்கிறார். அவர் தனது தொகுதியில் இருப்பதை விட, வியட்நாமில் அதிக நேரம் செலவழிக்கிறார். அவருக்கு வியட்நாம் மீது இந்த ஆர்வம் ஏன்?” என்று ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
குறிப்பாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்த நாளிலும், ராகுல் காந்தி வியட்நாமில் தான் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு விளக்கமாக, காங்கிரஸ் தரப்பு, “வியட்நாம் நாட்டின் பொருளாதார அமைப்பை ஆய்வு செய்யவே ராகுல் அடிக்கடி அந்நாட்டிற்கு செல்கிறார்” என்று கூறி விளக்கமளித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *