என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?! - அன்வார்
- Shan Siva
- 26 Sep, 2025
புத்ராஜெயா, செப் 26: விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சிறப்பாக
நிவர்த்தி செய்ய வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள
நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் இன்று கூறினார்.
இதுபோன்ற முயற்சிகள், கூட்டாட்சி வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையமான
ஃபாமவின் தோள்களில் மட்டும் தங்கியிருக்கக்கூடாது, மாறாக விவசாயிகள் அமைப்பு ஆணையமான LPP மற்றும் மலேசியாவின் மீன்வள மேம்பாட்டு
ஆணையமான LKIM போன்ற பிற
நிறுவனங்களையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
நீண்டகால பிரச்சினைகளைத் தீர்க்க நிறுவனங்களுக்கிடையே வலுவான ஒருங்கிணைப்பு
அவசியம் என்று அன்வார் சுட்டிக்காட்டினார்.
விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஃபாமாவால் மட்டும் தீர்க்க முடியாது. இதற்கு
LKIM, LPP மற்றும் முயற்சிகளை
திறம்பட ஒருங்கிணைக்கக்கூடிய பிற தொடர்புடைய அமைப்புகளின் ஈடுபாடு தேவைப்படுகிறது என்று
அன்வார் வலியுறுத்தினார்.
விவசாயிகளுக்கான நியாயமான விலைகள் அதிக உற்பத்தித்திறனை ஊக்குவிக்கும் மற்றும்
உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.
விலைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்போது, அதிகரித்த உற்பத்திக்கு நாம் அழுத்தம் கொடுக்க முடியும். இவ்வளவு
வளமான நிலம் உள்ள ஒரு நாட்டில், நாம் இன்னும்
பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற
விளைபொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம் என்பதில் அர்த்தமில்லை என்று அவர்
இன்று 40வது தேசிய விவசாயிகள்
சந்தை கொண்டாட்டத்தில் தனது உரையின் போது கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



