பாஸ் கட்சியில் சேர்வதில் என்ன தவறு?! - ஹம்சா ஜைனுதீன்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 5: சங்கங்களின் பதிவிலாகாவிடம் இன்னும் பதிவு செய்யப்படாத Parti Keluarga Malaysia கட்சியைக் கைப்பற்றும் தனது ஆரம்பத் திட்டத்தைக் கைவிடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரியில் பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தான் சேரவிருக்கும் புதிய கட்சி, பெரிகாத்தான் நேஷனலின் (Perikatan Nasional) மூன்று அங்கங்களில் ஒன்றாக இருக்கக்கூடும் என்று லாரூட் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதாக த் தெரிவிக்கப்பட்டது.

திந்நிலையில் 'புதிய இல்லம்' என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது மக்கள் குழப்பமடைகிறார்கள். அது ஒரு புதிய கட்சியை உருவாக்குவதைக் குறிக்க வேண்டிய அவசியமில்லை என்று ஹம்சா கூறினார். அதனால்தான் அனைவரும் முதலில் காத்திருக்க வேண்டும் என்று தாம் சொல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  அதோடு, தனது புதிய கட்சி ஏற்கனவே பெரிக்காத்தானில் இருக்கலாம் என்றும் அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார். 

பாஸ் கட்சியில் சேர வாய்ப்புள்ளதா என்று கேட்டபோது, ​​ஹம்சா மழுப்பலாகப் பதிலளித்தார், ஆனால் அந்த வாய்ப்பை நிராகரிக்கவில்லை.

"பாஸ் கட்சியில் சேருவதில் என்ன தவறு?" "எனக்கு ஒரு 'புதிய வீடு' இருக்கும் என்று மட்டுமே நான் கூறுவேன், ஆனால் அந்த வீடு ஏற்கனவே இருக்கலாம்" என்று பெர்சத்துவின் முன்னாள் துணைத் தலைவருமான அவர் கூறினார்.

கட்சித் தலைவர் முஹைதீன் யாசினுடன் ஏற்பட்ட கடுமையான தலைமைப் போட்டி உச்சத்தில் இருந்தபோது, ​​ஹம்சா கடந்த பிப்ரவரியில் பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

கடந்த மாதம், மலேசியக் கட்சியில் இணைந்து தலைமை தாங்குவது குறித்த பேச்சுவார்த்தைகளை ஹம்சா உறுதிப்படுத்தினார். இருப்பினும், அக்கட்சி இன்னும் RoS-ல் பதிவு செய்யப்படவில்லை, மேலும் அதன் ஆரம்ப விண்ணப்பம் 2022-ல் நிராகரிக்கப்பட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *